News October 23, 2024
ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
Similar News
News January 23, 2026
விருதுநகர்: ரூ.555 செலுத்தினால்., ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அனுகவும். இதனை SHARE IT.
News January 23, 2026
ஸ்ரீவி: ராணுவ வீரர் வீட்டில் திருடியவர் கைது

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.
News January 23, 2026
ஸ்ரீவி: ராணுவ வீரர் வீட்டில் திருடியவர் கைது

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.


