News October 27, 2024

ஆண்டாள் அலங்காரத்தில் குருசாமிபாளையம் மாரியம்மன்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

Similar News

News November 13, 2025

மோகனூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

மோகனூர் காவல் சரகத்திற்குட்பட்ட ஆரியூர் ஊராட்சி நடுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி. இவருடைய மணிகண்டன் (27), கூலித்தொழலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

News November 13, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (14.11.2025) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 13, 2025

நாமக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!