News December 10, 2024

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்

image

திருப்பூர், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். பக்தர்கள் கனவில் தோன்றி ஆண்டவன் கூறிய பொருளை கொண்டு வந்தால், பொருளை பூ வைத்து உத்தரவு கேட்பார். அதில் அனுமதி கிடைத்தால் மட்டுமே உத்தரவு பொருள் மாற்றப்படுகிறது. இவ்வாறு நேற்று காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

Similar News

News August 22, 2025

திருப்பூர் மக்களே முற்றிலும் இலவசம்!

image

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்ப்பு (ம) அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சூப், பிரியாணி, பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். SHAREit

News August 22, 2025

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறுவது வழக்கமாக வந்தது. மூன்று மாத காலமாக மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறாததால், இன்று(ஆக.22) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பெரும் திரளாக முகாமில் கலந்து கொண்டனர்.

News August 22, 2025

திருப்பூர் மருத்துவமனையில் செல்போனை மீட்ட போலீசார்

image

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஊதியூர் அருகே ராசிபாளையத்தைச் சேர்ந்த ரேவதி(35) என்பவர் தனது தாத்தா நாச்சி(72) என்பவருடன் வந்தார். அப்போது தனது செல்போனை தவற விட்டதை கண்டுபிடித்து மருத்துவமனை முதல்வர் மனோன்மணி முன்னிலையில் திருப்பூர் மாநகர சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் முதல் நிலைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் ரேவதியிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!