News January 8, 2026

ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்ட நடிகை

image

நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையை பார்த்து அறியமுடியாது என தெருநாய்கள் தொடர்பான வழக்கில் <<18789195>>SC<<>> நேற்று கருத்து தெரிவித்திருந்தது. இதை மேற்கோள் காட்டி, ஒரு ஆணின் மனநிலையையும் நம்மால் அறியமுடியாது என நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். ஒரு ஆண் எப்போது ரேப் செய்வான், எப்போது கொலை செய்வான் என்பது தெரியாததால், அனைத்து ஆண்களையும் சிறையில் தள்ளலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 7, 2026

Group B-க்கு தள்ளப்பட்ட ரோஹித், கோலி

image

நட்சத்திர வீரர்களான ரோஹித், கோலிக்கு மத்திய ஒப்பந்தத்தில் BCCI அதிர்ச்சி அளித்துள்ளது. அவர்கள் Group B-க்கு தரமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. A+ பிரிவை நீக்கியுள்ள BCCI, கில், பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு Group A-வில் இடம் வழங்கியுள்ளது. ரோஹித், கோலி இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், அவர்களின் தற்போதைய விளையாட்டு நிலையை பொறுத்து தரமிறக்கப்பட்டுள்ளனர்.

News February 7, 2026

விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய முடியுமா? DMK அமைச்சர்

image

முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக அமைச்சர் MRK பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை தீய சக்தி என்று குற்றம்சாட்டும் விஜய், வரி ஏய்ப்பு செய்து ஊழல் செய்துள்ளதை கோர்ட்டே உறுதிப்படுத்திவிட்டது என்றார். மேலும், விஜய் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என டிக்ளேர் செய்ய தயாரா எனவும் சவால் விடுத்தார்.

News February 7, 2026

நகைக் கடன்.. RBI முக்கிய அறிவிப்பு

image

இந்தியாவில் 2025 டிசம்பர் நிலவரப்படி, நகைக் கடன்களின் அளவு ₹3.82 டிரில்லியனாக அதிகரித்திருப்பதாக RBI கவர்னர் தெரிவித்துள்ளார். ஆனால், தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக் கடன் நிலுவை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் என வங்கிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்க ஏதுவாக, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் RBI முன் அனுமதியை பெறுவதில் இருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!