News August 26, 2025
ஆணவ படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்- தமிழிசை!

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்கள் இடையே பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? இதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசின் அஜாக்கிரதையும், சட்டம்- ஒழுங்கும்தான் காரணங்களாகும் என்றார்.
Similar News
News August 26, 2025
கோவையில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 26, 2025
BREAKING: கோவையில் வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 26, 2025
கோவை: வெறிநாய் தொல்லையா..? உடனே CALL!

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கோவை மாநகராட்சி சார்பில் 98437 89491 ரேபிஸ் ஹாட்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இதில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!