News April 3, 2025
ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: எஸ்.பி வாழ்த்து

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி கோயம்புத்தூரில் கடந்த மார்ச்.29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News April 10, 2025
கடலூர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்..

கடலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் – 98941 81364, குடிநீர் பிரச்சனை – 1800 425 1941, மாவட்ட சமூக நல அலுவலர் (குழந்தை திருமண தடுப்பு) – 1098, வரதட்சணை தடுப்பு & பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்பு – 1091, மருத்துவ உதவி அழைப்பு – 104. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
News April 9, 2025
தடையை மீறி மீன் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடலுார் மாவட்டத்தில்வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.