News December 12, 2025
ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் அறிவிப்பு

ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்ட வங்கதேசத்தில், 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதனுடன் அரசியல் சாசன திருத்தத்திற்கான பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அந்நாட்டின் முக்கிய கட்சியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
Similar News
News April 7, 2026
வேலூர்: 20 வயதில் திருமணம்; 14 வயது சிறுமி கர்ப்பம்!

கணியம்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (20), இவர் கடந்த ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 7, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 21 டாலர்கள் குறைந்து 4,650 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையானது ஏற்ற இறக்கமின்றி நிலையாக 1 அவுன்ஸ் 73 டாலர்களாக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் நம்மூர் சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலையில் சவரனுக்கு ₹1,120 குறைந்து மாலையில் ₹1,440 உயர்ந்து ₹1,11,920 ஆனது கவனிக்கத்தக்கது.
News April 7, 2026
இந்தியாவில் பெட்ரோல் விலை ₹1 கூட உயரவில்லை: அமித் ஷா

கொரோனாவை போலவே எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியையும் மோடி அரசு மோசமாக கையாள்வதாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலளித்து புதுச்சேரியில் பேசிய அமித் ஷா, சிலிண்டர், எரிபொருள் விவகாரத்தில் ராகுல் காந்தி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாகிஸ்தானில் தான் என்றும், PM மோடியின் ஆட்சியில் இந்தியாவில் பெட்ரோல் விலை ₹1 கூட உயரவில்லை எனவும் தெரிவித்தார்.


