News December 21, 2024

ஆட்சியர் தலைமையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நேற்று(டிச.20) காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் 40 மாணவ மாணவியர்களுடன் காப்பி வித் கலெக்டர் என்ற 138வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர்கல்வி வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

Similar News

News August 10, 2025

பட்டாசு விபத்து எதிரோலியால் போலீசார் அதிரடி நடவடிக்கை

image

விருதுநகர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கல் மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக மாவட்டம் முழுவதும் சட்டவிரோத பட்டாசு குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 10, 2025

விருதுநகர் பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

image

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை 04562-252397 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 10, 2025

சாத்தூர்: 15 ஆண்டுகளாக சரி செய்யப்படாத சாலை

image

ஆக.10 சாத்தூர்: மேட்டமலை – இ.குமாரலிங்கபுரம் கிராமங்களுக்கிடையே 4 கிலோமீட்டர் தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளுக்கு அதிக தொழிலாளர்களும் பயணிக்கின்றனர். இச்சாலையில் 2.2 கிலோமீட்டர் சாத்தூர் பஞ்சாயத்து ஒன்றியத்துக்கு உட்பட்டது. இச்சாலை கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!