News January 27, 2025
ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 25 முதல் 31 வரை கொண்டாடப்படுவதையொட்டி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
Similar News
News August 19, 2025
ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு <<17451945>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம்* ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைதளத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி பற்றிய விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில் “ஜாக்கிரதை மோசடியாளர்கள் போலியான வர்த்தக இணையதளங்களை உருவாக்கி விலை உயர்ந்த பொருட்கள் குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளதாக கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்” என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.