News October 14, 2024

ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும். அதன்படி, இன்று(14/10/2024) குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காலோன் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு உறுதி அளித்தார் .

Similar News

News August 25, 2025

ராம்நாட்டில் வங்கி வேலை.. நாளை கடைசி!

image

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 25, 2025

ராம்நாடு: வீட்டு வரி பெயர் மாத்தணுமா?

image

ராம்நாடு: நீங்கள் வாங்கிய வீட்டின் பத்திரப்பதிவு வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சல் வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் சரிப்பார்த்த பின் வீட்டுவரி பெயர் 15- 30 நாட்களில் மாறிவிடும். SHARE IT

News August 25, 2025

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!