News August 6, 2024

ஆட்சியர் குறைதீர்வு நாளில் புதிய நடைமுறை

image

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 6 தாலுகாவுக்கு தனித்தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இந்த கவுன்டர்களில் பொதுமக்களின் மனுக்களை சீலிட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், கவுண்டர்களின் மூலம் அதிக  மனுக்கள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News August 11, 2025

வேலூரில் மனித கழிவுகளை அகற்ற இனி ரோபோக்கள்

image

வேலூர் மாநகராட்சியில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் இனி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வேலையைச் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் பணியாளர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 11, 2025

வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு

image

வேலூர் மாவட்டத்தில் வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இயற்கை சீற்றங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இந்த காப்பீடு பாதுகாப்பளிக்கும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

News August 11, 2025

வேலூரில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையதளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் போன்ற கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17368587>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!