News November 26, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் 508 மனுக்கள் பெறப்பட்டன

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பரமேசுவரி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 508 மனுக்களை பெற்றாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News

News July 11, 2025

எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி – ராமதாஸ் குற்றச்சாட்டு

image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டிற்குள் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லண்டனில் இருந்து இது வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அரிய வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 12.07-2025 ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர், வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டைகோரும் மனுக்களை பதிவு செய்து பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

திண்டிவனம்; தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை திண்டிவனம்புனித அன்னாள் கலை & அறிவியல் கல்லூரி, நடைபெற உள்ளது. இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!