News March 25, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பொற்செல்வி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதல் கணவன் கைவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 2, 2025
புதுக்கோட்டை: பொன் வழங்கும் பொன்வாசிநாதர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு புதிதாக வாங்கிய தங்க நகையினை பொன்னால் ஆன இறைவனுக்கு அர்ச்சனையில் வைத்து வழிபட்டால், வீட்டில் மேலும் மேலும் பொன் செல்வம் பெருகுமென நம்பப்படுகிறது.மேலும், நகை கடை வைத்திருப்பவர்களின் தொழில் மேம்படும். உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து செல்வம் பெருக்க உதவுங்கள்.
News April 2, 2025
புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
புதுகையில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

புதுகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Tailor பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் <