News April 14, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. இதை ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் SP கிரண் ஸ்ருதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தனது வாக்கினை பதிவு செய்தார்.
Similar News
News July 10, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை.09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு (9884098100) அழைக்கலாம்.
News July 10, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 பேர் எழுதுகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் 21,000 பேர் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயன்பாட்டில் திறக்கவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News July 9, 2025
ராணிப்பேட்டையில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் (ஜூலை 10) நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இ-பிளாக்கில் முதல் தள கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தொழில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.