News November 25, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். நிலப் பிரச்சனை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
Similar News
News November 7, 2025
சேலம்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) சேலம் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
BREAKING: சேலத்தில் சுட்டுப் பிடித்த போலீஸ்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஒரு கல்குவாரியில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2 மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழிலாளிகளான பாவாயி மற்றும் பெரியம்மாள் ஆகியோரை கொலை செய்து, அவர்களது நகைகளை திருடிய அய்யனார் என்பவரை, காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
News November 7, 2025
சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

சேலம் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


