News November 25, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

image

சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். நிலப் பிரச்சனை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

Similar News

News September 18, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (18.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News September 18, 2025

நாளை எங்கெங்கு முகாம் தெரியுமா மக்களே?

image

சேலம் சதுரங்காடி, கற்பகம் திருமண மண்டபம், ஓமலூர், செவ்வாய்சந்தை ரோட்டில் உள்ள சமுதாயக்கூடம், மல்லமூப்பம்பட்டியில் சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மாளிகை, குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நாளை (செப்.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு நடைபெறுகிறது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு!

News September 18, 2025

சேலம்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

சேலம், ஓமலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

error: Content is protected !!