News September 18, 2024

ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

image

2021-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வான பிரதிநிகளின் பதிக்காலம் 19-10-2026 அன்று நிறைவடைகிறது. பதவிக்காலம் குறித்து ஐயம் தெரிவிக்கும் கடிதங்கள் ஆணையத்திற்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். 2024 டிசம்பரில் தேர்வான பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதாக கள்ளக்குறிச்சியில் வதந்தி பரவுகிறது. ஊராட்சி தலைவர்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.

Similar News

News September 5, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1,50,000 சம்பத்தளத்தில் அரசு வேலை!

image

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>லிங்கில் <<>>சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

News September 5, 2025

கள்ளக்குறிச்சி:ரயில் நிலையத்தில் சடலம் மீட்பு

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று சடலம் மீட்கப்பட்டது, விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்துள்ளது. இவர் கடலூர், வேப்பூரில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்டம்பர் 5காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டு தக்காளி ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 30 இஞ்சி ரூபாய் 100 அவரைக்காய் ரூபாய் 60 80 கத்திரிக்காய் ரூபாய் 40 60 பாகற்காய் நாற்பது சுரைக்காய் ரூபாய் 25 பாகல் ரூபாய் 30 பச்சை மிளகாய் 50 புதினா கட்டு ரூபாய் உருளைக்கிழங்கு ரூபாய் 30 என்று விற்பனையாகிறது என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!