News March 10, 2025

ஆட்சியரிடம் 340 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை, பொதுமக்கள் வழங்கினர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 10, 2025

நாமக்கல்: இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி!

image

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டி திரு.வி.க தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (70), கூலித் தொழிலாளி, சனிக்கிழமை மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி வையப்பமலை சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி, மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பொன்னாயா அளித்த புகாரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

நாமக்கல்: 2-ம் நிலை காவலர் தேர்வில் 2,696 பேர் பங்கேற்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நேற்று திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மொத்தம் 3,146 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,245 ஆண்களும் 451 பெண்களும் என 2,696 பேர் தேர்வில் பங்கேற்றனர். 450 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுகள் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 10, 2025

நாமக்கல் அருகே விபத்து; ஒருவர் பலி

image

நாமக்கல், நாமகிரிப்பேட்டை அருகே காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விவசாயி மாதேஸ்வரன் (55), இவர் நேற்று முன் தினம் டூவீலரில் சென்றபோது நிறுத்தியிருந்த டிராக்டர் மீது மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், பின்னர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!