News October 29, 2024
ஆட்சியரிடம் மனு அளித்த நாகர்கோவில் எம்.எல்.ஏ

குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழக முதல்வருக்கு நாகர்கோவில் எம்.எல்.ஏ M.R. காந்தி மனு அளித்தார். அதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மணவாளகுறிச்சி I.R.E.L நிறுவனத்தை பாதுகாக்கவும், இதன் செயல்பாட்டை முடக்கும் விதத்தில் நடத்தப்படும் போராட்டத்தை தடுக்கவும், தமிழக அரசால் வழங்கப்பட்ட தாது மணல் எடுக்கும் செயலை செயல்படுத்தவும் கருத்து கேட்டு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 9, 2025
குமரி: பூம்புகார் படகு சேவை START..!

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<
News August 9, 2025
தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக லியோ டேவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார்.