News September 6, 2025

ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு கூட்டம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் தலைமை தாங்கி, பங்கேற்ற அரசு பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பினை பணியாளர்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Similar News

News September 6, 2025

ராணிப்பேட்டை முற்றிலும் இலவசம்! SUPER NEWS

image

ராணிபேட்டை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் (அ) உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE

News September 6, 2025

சோளிங்கர்: சந்திர கிரகணம் – கோவில் நடை சாற்றப்படும்

image

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், செப்.7 அன்று நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆலயங்களின் நடைகள் சாத்தப்படும். அதே சமயம், ஊர்கோவில் மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.8 அன்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெறும்

News September 6, 2025

காவலர் தினம் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப்.6 ) கொண்டாடப்படுகிறது. காவலர் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!