News March 30, 2025
ஆசிரியர் அடித்ததில் மாணவர் உடல்நிலை பாதிப்பு

மாத்தூரில் உள்ள தனியார் அரசு தனியார் பள்ளியில் உணவு இடைவேளை முடிந்து தாமதமாக வந்த 4 ஆம் வகுப்பு மாணவனை ஆனந்தி என்ற ஆசிரியர் குச்சியால் அடித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அம்மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்தது காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
Similar News
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
News April 1, 2025
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்து

மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (40) டைல்ஸ் தொழிலாளி, இவர் போச்சம்பள்ளியில் இருந்து கூச்சனூர் செல்லும் சாலையில், திருவாய் மாரியம்மன் கோவில் எதிரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் வினோத் குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸ்சார் உடைலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தது வருகின்றனர்.