News July 11, 2024
ஆசிரியர்கள் கைது: மாணவிகள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியர்களை நேற்று போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து இன்று (ஜுலை 11) காலை 9.15 மணி அளவில் சுமார் 200 மாணவிகள் அங்குள்ள சி.டி.எச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
Similar News
News July 9, 2025
இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள்

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
News July 9, 2025
திருவள்ளூரில் 151 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், திருவள்ளூரில் மட்டும் 151 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (044-27660250)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க <<17002046>>தொடர்ச்சி<<>>