News February 13, 2025
ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.15) ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்படுகின்ற சவால்கள், மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள சவால்கள், பள்ளியின் அடிப்படைத் தேவைகள், கழிவறை சுத்தம் குறித்து கேட்டறிந்து தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
பெரம்பலூர்: 1லட்சம் பனை விதைகள் நடல்

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தக்கூடிய பனைமரக்காடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, தெரணி கிராமம் அயினாபுரம் சாலையில் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பனை விதைகளை நட்டனர்.
News September 22, 2025
பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க
News September 22, 2025
பெரம்பலூர்: “தீபாவளிக்கு கூடுதல் பேருந்து இயக்க முடிவு”

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கரிடம் கேட்டபோது, “தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்கும். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.