News April 7, 2024

ஆசிரியரை சரமாரியாக வெட்டி நகை பறிப்பு

image

மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 19, 2025

யார் இந்த சி.பா.ஆதித்தனார்?

image

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.

News April 19, 2025

மதுரை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

News April 19, 2025

மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்து

image

மதுரையில் நடைபெறும் நிகழ்விற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மதுரையைச் சேர்ந்த வைரமுத்து ரசிகர் மன்றத்தினர் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து வைரமுத்துவிற்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். மதுரையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்ட பிறகு சென்னைக்கு நாளை புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!