News May 29, 2024
ஆசிரியருக்கு அடி உதை-காரணம் இதுதான்!

மதுரை ஆண்டாள்புரம் வெங்கடேஸ்வரன்(50). அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியராக உள்ளார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவரை வழிமறித்த 4 பேர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் வெங்கடேஸ்வரன் சகோதரரான திருச்சி மின்அமலாக்கத்துறை அதிகாரி கொண்டல்ராஜ் மகனுடைய விவாகரத்து வழக்கில் சகோதரர் தரப்பிற்கு ஆதவராக இருந்ததால் எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
Similar News
News September 10, 2025
சுகாதார துறையில் வாய்ப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் & மாவட்ட காசநோய ஒழிப்பு திட்டத்தில் மருத்துவ ஆலோசகர், சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி, விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் (10.09.2025) மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
News September 10, 2025
மதுரை: திருநங்கையருக்காக உருவாக்கப்படும் புதிய வீடுகள்

மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சியில் கட்டப்புளி நகரில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 400 பேருக்கு இலவச வீடுகள் வழங்குவதற்காக, 10 ஏக்கருக்கும் கூடுதலான இடம் கையகப்படுத்தப்பட்ட முதற்கட்டமாக 194 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று முதல்வர் நேரில் இந்த வீடுகளை பயனாளிகளுக்கு திறந்து வைக்க உள்ளார்.
News September 10, 2025
மதுரை: மகனை குத்தி கொலை செய்த தந்தை

எழுமலை அருகே துள்ளுக்குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் பாண்டி(45)யின், மனைவி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். துக்கம் விசாரிக்க வந்த இவரது தந்தை மாரியப்பனுக்கும்(75), பாண்டிக்கும் நேற்று. இரவு தகராறு ஏற்பட்டபோது பாண்டி தந்தை மாரியப்பனை கட்டையால் தாக்க, ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது மகன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர்.