News January 15, 2026
ஆசிரியரின் உயிரை பறித்த திமுக அரசு: EPS

திமுக கொடுத்த பொய் வாக்குறுதி காரணமாகவே, <<18857511>>பகுதிநேர ஆசிரியர் கண்ணன்<<>> தற்கொலை செய்துகொண்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில் அவர், ஆசிரியர் மரணித்த கவலை கொஞ்சமும் இன்றி கவிதை பாடச் சொல்லி Vibe செய்யும் ஸ்டாலின், முதல்வர் என்ற உயரிய பதவிக்கு ஒரு இழுக்கு என விமர்சித்துள்ளார். மேலும், கண்ணனின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக திமுக அரசு ₹50 லட்சம் வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 23, 2026
நாமக்கல் அருகே மதுவால் ஒருவர் பலி!

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி, அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
ஆர்டர் பண்ணாமலே பொருள் வருதா… கவனமா இருங்க

Flipkart, Amazon ஆகியவற்றில் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு பொருள் வந்துள்ளது என கூறி சிலர் நூதன மோசடி செய்து வருகிறார்கள். அந்த ஆர்டரை கேன்சல் பண்ண, ஒரு கஸ்டமர் கேர் நம்பரை கொடுக்கிறார்கள். நீங்கள் அதில் அழைத்து பேசினால், ஒரு OTP-யை அனுப்புகிறார்கள். அதை நீங்க சொன்ன உடனேயே, உங்க போன் நம்பருடன் லிங்க் ஆகியிருக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
News January 23, 2026
இனி மாதந்தோறும் ₹3,000 பென்ஷன்.. அரசின் திட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்கள்(கட்டட வேலை, தினக்கூலி, நிரந்த வேலை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 -40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் <


