News October 26, 2025

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற நெல்லை வீராங்கனை

image

பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் 3வது‌ இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் நமது‌ திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை எட்வினா‌ ஜெய்சன் 400மீ போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இந்த சாதனை இளைஞர்கள் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News October 26, 2025

நெல்லை: சூரசம்ஹார பக்தர்ளுக்கு சிறப்பு ரயில்

image

சூரசம்கார விழாவை காண்பதற்காக தமிழக முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 09.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் மதுரை வழியாக மறுநாள் காலை அதாவது கந்த சஷ்டி அன்று காலை 8 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும். அதே நாள் இரவு 10:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக தாம்பரம் செல்லும்.

News October 26, 2025

நெல்லை: இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லையில் நடப்பு மாதத்திற்கான இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் மெயின் ரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள விகாசா ஸ்ரீ ஸ்ரீ அகாடமி வளாகத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும். இதில் இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் பங்கேற்று பயனடையலாம் என மண்டல துணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News October 26, 2025

நெல்லை: அரசு பேருந்துக்கு நீதிமன்றம் ரூ.20,000 அபராதம்

image

நாங்குநேரி பகுதியை சேர்ந்த தேவி, மகன்கள் இசக்கி அரவிந்த் மற்றும் நம்பிராஜன் ஆகியோர் நெல்லையில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தனர். ஆனால் நடத்துனர் வள்ளியூருக்கான பயணச்சீட்டு கொடுத்து கூடுதலாக 24 வசூலித்ததுடன் நாங்குநேரிக்குள் பேருந்து செல்லாமல் வெளியிலேயே இறக்கிவிட்டு சென்றனர். பாதிக்கப்பட்டோர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.

error: Content is protected !!