News May 15, 2024
ஆங்கில வழி பிரிவை சேர்க்க கோரி முதல்வருக்கு மனு

உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில மொழி கலைப்பிரிவு அட்மிஷன் மறுக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பொதுமக்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கும் கல்வித்துறை அமைச்சருக்கும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பிரிவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என இன்று மனு அனுப்பியுள்ளனர்.
Similar News
News April 4, 2026
திருப்பூர்: குடும்ப தகராறில் பெண் தற்கொலை

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன். அவரது மனைவி வசந்தி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வசந்தி கடந்த 2 மாதமாக திருப்பூர் காந்திநகர் லட்சுமி தியேட்டர் சாலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை.
News April 4, 2026
திருப்பூர்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் வணிக வரி அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டாக்சியில் வந்த இருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.9.90 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பூர் வடக்கு தொகுதியில் நடந்த சோதனையில், கர்நாடகாவை சேர்ந்த மோகன் நாயக் என்பவரிடமிருந்து ரூ.2,27,200 பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
News April 4, 2026
திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 03.04.26 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை , தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும்.


