News March 19, 2025

ஆங்கிலத்தால்தான் உயர் பொறுப்பில் சுந்தர் பிச்சை: மனோ தங்கராஜ்

image

இந்தி கற்றதாகக் கூறப்படும் சுந்தர் பிச்சை இன்று இந்திக்காரர்களுடன் வேலை பார்க்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்களுடன் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றுகிறார். அது இந்தி கற்றதால் அல்ல, ஆங்கிலம் கற்றுக்கொண்டதால். ஒரு வேளை அன்று பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், இன்று Google Alphabet நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியில் வேறொருவர் அமர்ந்திருப்பார் என்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

Similar News

News March 19, 2025

நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையை இடமாற்ற திட்டம்

image

நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 40 முதல் 50 பேர் வரை கைதிகளை பார்க்க வரும் நிலையில், இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது. அதனால் புதிய சிறைச்சாலை அமைக்க அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே இடத்தில் 30 ஏக்கர் அளவிற்கு புறம்போக்கு நிலங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

News March 19, 2025

திருவனந்தபுரத்தில் வைகுண்டருக்கு மணி மண்டபம்: கேரள முதல்வர்

image

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அயயா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள நாடார் சமூக மக்களிடம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வைகுண்ட சாமி தர்மபரிபாலன அமைப்பு தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான பிரதிநிதிகள் கேரள முதலமைச்சரை சந்தித்தபோது இதை அவர் கூறியதாக தகவல்.

News March 19, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 19) 28.55அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.10 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 50 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

error: Content is protected !!