News August 26, 2025
ஆக.27-ல் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாளை (ஆக.27) நடக்கவிருந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும், என்ற சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்று நாளை நடக்கவிருந்த விளையாட்டு போட்டிகள் வரும் ஆக.30-ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு!

சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது; வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை வீதிகளை முறையாக பரிசீலனை செய்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பயன்படுத்தப்படுவது அத்தியாவசியம் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் சாலையில் பயணிக்க வேண்டுமெனவும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
News August 26, 2025
இலவச போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 38 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தாட்கோ மூலம் இலவசமாக தங்குமிடம் உணவுடன் போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 26, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.