News August 10, 2024
ஆக.11ல் நாகர்கோவில் நாய் கண்காட்சி

கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவில் அனைத்து வகை நாய் கண்காட்சி & சேம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறுகிறது. சேம்பியன்ஷிப் போட்டிகளுக்கு செர்பியாவை சேர்ந்த நெனாட் டேவிடோவிக், நடாசா டேவிடோவிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட கென்னல் கிளப் செய்து வருகின்றது.
Similar News
News November 3, 2025
குமரியில் ஊராட்சி செயலாளர் வேலை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களில் காலியாக உள்ள 30 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதில் கல்வி தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக நவ.9 அன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News November 3, 2025
கன்னியாகுமரியில் ஒருவர் அடித்துக் கொலை

பேயன் குழியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மனைவியிடம் ராஜன் என்பவர் அத்து மீற முயன்றுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட கோபாலகிருஷ்ணன் ராஜனிடம் கேட்ட போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணன் கம்பால் ராஜனை தாக்கியதில் ராஜன் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் இரணியல் போலீசில் நேற்று சரணடைந்தார்.
News November 3, 2025
குமரியில் டிஎஸ்பி.க்கள் இடமாற்றம்

குமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கோட்டத்திற்கும், சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்ட டிஎஸ்பி சுரேஷ்குமார் தக்கலை உட்கோட்ட துணை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று கன்னியாகுமரி மாவட்ட நில மோசடி கருப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கண்ணதாசனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


