News August 7, 2025
ஆகஸ்ட் 13ல் ஆர்ப்பாட்டம்.. தூத்துக்குடியில் ஏஐடியூசி அறிவிப்பு

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு ஏஐடியுசி அகில இந்திய தலைவர் சங்கர் பேட்டியளித்தார். மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
Similar News
News August 10, 2025
தூத்துக்குடி: IOB வங்கியில் வேலை..! Apply..

தூத்துக்குடி மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <
News August 10, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-யை மறந்தால்; இதை செய்யுங்க..

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். *ஷேர் பண்ணுங்க*
News August 9, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.