News August 25, 2025
ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 25, 2025
மருதமலை முருகன் கோயில்.! நோய் தீர்க்கும் விபூதி.!

கோவை, மருதமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும், தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மக்களே SHARE பண்ணுங்க!
News August 25, 2025
கோவை: ரூ.65,000 சம்பளத்தில் வேலை APPLY NOW

கோவை மக்களே, மத்திய அரசின் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தேசிய அளவில் செயல்படும் 11 ஆலைகளில் காலியாக உள்ள 515 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 25, 2025
மழை வேண்டி மரத்திற்கு வினோத திருமணம்.!

மேட்டுப்பாளையம் அருகே ஓலைக்காரம்பாளையம் கிராமத்தில், மழை மற்றும் உலக நன்மை வேண்டி விசித்திர நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி, கிராம பெரியவர்கள் அரச மரத்துக்கும் வேம்பு மரத்துக்கும் திருமணம் நடத்த தீர்மானித்துள்ளனர். இதற்காக ஊர் நிர்வாகிகள், கிராம மக்களுக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கி அழைத்து வருகின்றனர். மழை தட்டுப்பாடு நீங்க மக்கள் நம்பிக்கையுடன் இந்நிகழ்வை நடத்த உள்ளனர்.