News July 10, 2025
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு!

புகளூர் காகித ஆலையின் முன்பு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டம் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உட்பட பலர் மீது நேற்று வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
கரூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 26ஆம் தேதி அரசு கலை கல்லூரி, தாந்தோன்றிமலையில் நடைபெறுகிறது. இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு அனைத்து கல்வித்தகுதிகளிலும் பணியாட்களை தேர்வுசெய்யவுள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News July 11, 2025
கரூர்: தனியார் டிவி நிருபர் மீது தாக்குதல்

கரூர்: குளித்தலை, பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சிவா(34). இவர், சன் ‘டிவி’யில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். போதையில் இருந்து நான்கு பேரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவாவிடம் இருந்த மொபைல் போன், பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிவா, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News July 10, 2025
புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமா? ஈஸியாக வாங்கலாம்

கரூர் மாவட்டத்தில் வரும் 12 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. ▶️கரூர் ▶️அரவக்குறிச்சி ▶️மண்மங்கலம் ▶️புகழூர் ▶️குளித்தலை, ▶️கிருஷ்ணராயபுரம் ▶️கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல் மேலும் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!