News August 7, 2024
அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டார். பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்., பொது செயலாளராக இருந்துள்ளார். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் உடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து, அவரிடம் போலீசார் கடந்த 3 நாட்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
Similar News
News September 15, 2025
சென்னையில் சொந்த வீடு இருக்கா?

சென்னையில் செப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டு உட்பட அனைத்து வகையிலும் சொத்து வரியை செலுத்த முடியும். க்யூ ஆர் கோடு வாயிலாகவும் மற்றும் What’s App வாயிலாக 9445061913 என்ற எண்ணிலும் செலுத்தலாம். வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்துங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.
News September 15, 2025
ராயப்பேட்டை: ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு

ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது நஸ்ருதின் என்பவரை கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 15, 2025
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கும், விசிக நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 22-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.