News January 30, 2026

அவிநாசி அருகே விபத்து: இளைஞர் பலி

image

அவிநாசி சின்னேரிபாளையத்தைச் சேர்ந்த மொபைல் கடை உரிமையாளர் சுரேஷ் (27), கோவையிலிருந்து திரும்பும்போது தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 16, 2026

திருப்பூர்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

திருப்பூர் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News February 16, 2026

திருப்பூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

திருப்பூர்: குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

image

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!