News March 22, 2026
அவர்களே முதலில் தாக்குதலை தொடங்கினார்கள்: ஈரான்

PM மோடியுடனான தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் பெஸ்கோவ் நாங்கள் போரை தொடங்கவில்லை என்று கூறியுள்ளார். அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியதாக கூறினார். அணுசக்தி நடவடிக்கைகளை தடுக்கவே இந்த தாக்குதல்கள் என்ற அமெரிக்காவின் கூற்றையும் அவர் நிராகரித்தார். இந்த போர் முடியவேண்டுமென்றால் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார்.
Similar News
News April 8, 2026
ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!

தங்கள் மீதான தாக்குதலை <<19594820>>2 வார காலத்திற்கு நிறுத்திவைத்த<<>> டிரம்ப்பின் முடிவை ஈரான் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. அதனையடுத்து ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளது.
News April 8, 2026
இனி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் எதிரொலியாக தமிழக போலீஸ் ஸ்டேசன்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்றி இனி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது. இன்ஸ்பெக்டர் & DSP-களின் கண்காணிப்பின்றி ஸ்டேசன்களில் யாரையும் விசாரிக்க கூடாது. விசாரணையின்போது அடிக்க பயன்படுத்தும் இரும்பு, பிளாஸ்டிக் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
News April 8, 2026
தேமுதிகவை காப்பாற்றியது அதிமுகதான்: EPS

அதிமுகவின் உதவியை மறந்து விட்டு திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்துள்ளதாக EPS குற்றம்சாட்டினார். ஆத்தூரில் பிரசாரம் செய்த அவர், வெண்டிலேட்டரில் இருந்து தேமுதிகவை காப்பாற்றியது அதிமுகதான் என்றார். கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டு அவரவர் சின்னங்களை மீட்டு கொடுத்தது அதிமுக தான் என்றும், கூட்டணியில் சேரும் கட்சிகளின் காலை வாரிவிடுவது தான் திமுகவின் வழக்கம் எனவும் சாடினார்.


