News April 3, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஆக. 8) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

image

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.

News August 8, 2025

தென்காசி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

image

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தாய்ப்பால் வார விழாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

error: Content is protected !!