News March 17, 2026
அழுத்தங்களால் கீழடியில் அகழ்வாராய்ச்சி: CM

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், நிறுத்தி வைத்துள்ள கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசை வெளியிட வைப்போம் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 6, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 5, 2026
காதல்.. நடிகை த்ரிஷாவின் புதிய POST

விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷா காதலை குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில், ‘எல்லாம் காதல் இல்லை. ஆனால், காதல் இல்லாவிடில் எதற்கும் அர்த்தம் இல்லை’ என்ற போட்டோவை ஷேர் செய்து, அதற்கு ‘உண்மை’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார். எந்த விஷயத்தை மேற்கோள் காட்டி த்ரிஷா பதிவிட்டுள்ளார் என்பதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. என்னவா இருக்கும்?
News April 5, 2026
மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி: EPS

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணியின் ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரி மக்களுக்கு நன்மை கிடைக்கும் என EPS தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், இரு இடங்களிலும் வெவ்வேறு கட்சிகள் இருந்தால் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி கிடைக்காது என கூறியுள்ளார். NDA ஆட்சிக்கு வந்தால் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிதி உயர்த்தி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.


