News January 20, 2025

அழுகிய நிலையில் போலீஸ்காரர் உடல் மீட்பு

image

மேலூர் அருகே அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் நல்ல செழியன்(40). இவர் 3 வருடங்களுக்கு முன் பேரையூரில் பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது வீட்டில் 2 நாட்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இன்று அருகில் உள்ளவர்கள் துர்நாற்றம் வீச, உள்ளே சென்று பார்த்த போது பாதி அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 3, 2026

மதுரை: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2026

மதுரை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING உசிலம்பட்டி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் சரவணகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

error: Content is protected !!