News January 4, 2026
அல்லு அர்ஜுனை ஓவர்டேக் செய்வாரா ரன்வீர் சிங்?

இந்தியாவில் ₹800 கோடி வசூலைக் கடந்த முதல் நேரடி பாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை ’துரந்தர்’ பெற்றுள்ளது. ரன்வீர் சிங் நடித்துள்ள இப்படம் ஏற்கெனவே உலகளவில் ₹1,000 கோடி வசூலை எட்டிவிட்டது. எனினும் தற்போது வரை ₹830 கோடியுடன் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற சாதனை அல்லு அர்ஜுனின் இந்தி பதிப்பான ’புஷ்பா 2’ வசம் உள்ளது. இந்நிலையில் துரந்தர் அந்த சாதனையை விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News February 4, 2026
காங்., உடன் தொகுதிகள் பற்றி பேசவில்லை: கனிமொழி

காங்., உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்த கனிமொழி, தொகுதிகள் பற்றி இதுவரை பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், குழுவில் இருப்பவர்களே கூட்டணி & தொகுதிப் பங்கீடு உள்பட மற்ற விஷயங்களை பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். சமீபமாக திமுக – காங்., கூட்டணியில் புகைச்சல் உண்டான நிலையில், இரு கட்சியினர் தரப்பிலும் கூட்டணி தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
News February 4, 2026
SC-ல் அனல் பறக்க வாதாடிய CM மம்தா

SIR-க்கு எதிரான வழக்கில் SC-ல் அம்மாநில CM மம்தா பானர்ஜியே நேரடியாக ஆஜராகி வாதாடி இருக்கிறார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் SIR பணிகளை செய்ய 2 வருடங்கள் ஆகும் என்ற அவர், வெறும் 2 மாதங்களில் செய்து முடிக்க ECI முயற்சிப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுகத் திட்டம் இருப்பதை உணர முடிகிறது என கூறியுள்ளார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க அவசரப்படுத்தியதால் குளறுபடி நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.


