News November 15, 2024
அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் கபூர். இவர் நேற்று மதியம் நண்பர்களோடு கடலில் இறங்கி குளித்தனர். அப்பொழுது திடீரென எழுந்து வந்த ராட்சத அலை ஒன்று அவர்களை வாரி சுருட்டியது. இதில் நண்பர்கள் தப்பித்து கரை திரும்பிய நிலையில் அப்துல் கபூரை காணவில்லை. தகவலறிந்த போலீசார் மீனவர்களுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்துல் கபூர் பாறை இடுக்கிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
Similar News
News March 4, 2026
புதுவை: சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியரின் மகன் பலி!

புதுவை வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியர் ரேணுகாவின் மகன் ஜெயக்குமார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முருங்கப்பாக்கம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


