News October 25, 2024
அலையாத்தி காடுகள் நடும் திட்டம் துவக்கம்

சர்வதேச பருவநிலை மாற்ற தாக்கம் குறித்த விழிப்புணர்வு நாளை முன்னிட்டு இன்று (அக்.25) ராதாபுரம் விஜயாபதி கிராமத்தில் மீன்வளப் பூங்கா எனும் அலையாத்தி காடுகள் நடும் திட்டம் துவக்கப்படுகிறது. அனைத்து கடற்கரை கிராமங்களிலும் பனை விதைகள் நடவு செய்யப்படுவதாக கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (அக்.24) தெரிவித்தார்.
Similar News
News January 28, 2026
திருநெல்வேலி: ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி

நெல்லை மாவட்டம் விகே புரம் வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் இவர் மகன் பேச்சி சொர்ணராஜ். இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் நேற்று விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பேச்சி சொர்ணாராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 28, 2026
நெல்லை: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

நெல்லை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News January 28, 2026
நெல்லை அருகே விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

வள்ளியூர் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(22). இவர் நேற்று வள்ளியூரில் இருந்து நெல்லைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்றடைப்பு வாகைகுளம் அருகே வந்த போது பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


