News November 17, 2024

அலுவலகம் இல்லாததால் நெசவாளர்கள் அவதி

image

காஞ்சியிலும் அய்யம்பேட்டையிலும் உள்ள நெசவாளர்கள் காஞ்சிபுரத்தில் அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது குறைகளை பூர்த்தி செய்ய சென்னை அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளதாகவும், மழைக்காலங்களில் நெசவு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், ஊக்கத்தொகைகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய காஞ்சி ஜவுளி மற்றும் நூல் துறை அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

காஞ்சி: தகாத உறவு காதலிக்கு கத்திக் குத்து!

image

உத்திரமேரூர் அருகே ராவத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த லதா (35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (27) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொண்டு தனியாகச் செல்லுமாறு லதா வலியுறுத்தியதால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்த், தான் வைத்திருந்த கத்தியால் லதாவைக் குத்திவிட்டுத் தப்பியோடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

News March 11, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

காஞ்சிபுரம்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

காஞ்சிபுரத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

error: Content is protected !!