News August 1, 2024

அறிவுசார் மையத்தில் ஆணையாளர் ஆலோசனை

image

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில் அரசு தேர்வுக்காக பயிலும் மாணவ, மாணவிகளிடம் பயிற்சி குறித்த ஆலோசனைகளை இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். ஆய்வில் அஸ்தம்பட்டி மண்டல செயற்பொறியாளர் வாசுகுமார், உதவி ஆணையாளர் எஸ்.எஸ். சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 10, 2025

சேலம் சரகத்தில் 457 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து

image

சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம், தருமபுரியில் கடந்த 10 மாதங்களில் உயிரிழப்பை ஏற்படுத்திய 457 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.மேலும் பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 10, 2025

கோவில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்;பாஜக எச்சரிக்கை!

image

சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சுற்றுச்சூழல் பிரிவின் சார்பில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையாளருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதில் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வாங்கிக் கொண்டு அர்த்த மண்டபத்திற்கு பக்தர்கள் அனுமதிப்பதாகவும் இலவச தரிசனத்திற்கு உள்ளே விடுவதில்லை என்றும் இதனை உடனடியாக மாற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

News November 10, 2025

பயணியர் நிழற்கூடம்: திறந்து வைத்த மெக்கானிக்!

image

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அழகாபுரம் காவல் நிலையம் அருகே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேருந்து பயணிகளுக்கான நிழல் கூடம், இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள், அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரை வைத்து, பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டினர்.

error: Content is protected !!