News January 19, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன ஜனவரி 2026 முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! முக்கிய தகவல்

நாமக்கல்லில் உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 18-60 வயதுடைய பணியாளர்களுக்கு, டூவீலர் மானியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள இமாம்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். உரிய ஒப்புதல் பெற்ற பின்னரே வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இன்று 13.03.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கவும் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News March 12, 2026
நாமக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


