News December 25, 2025

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நாமக்கல் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் டிசம்.27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம்Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit

Similar News

News December 29, 2025

நாமக்கல்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

image

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த<> லிங்க்கை கிளிக் <<>>செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். யாருக்காவது உதவும் இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

News December 29, 2025

நாமக்கல் அருகே சோகம்: தம்பதி விபரீத முடிவு!

image

நல்லுார் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி பச்சமுத்து(85), தங்கம்மாள்(82). இவர்கள் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களது மகன் வெற்றிவேல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகன் இறப்புக்கு பின், உறவினர்கள் யாரும் இவர்களை பராமரிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நல்லார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 29, 2025

பரமத்தி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ராசாம்பாளையம் டோல்கேட் பகுதியில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த துரைராசு என்பவர் லாரியை நிறுத்தி விட்டு, எதிரே உள்ள கடைக்கு தண்ணீர் கொண்டுவர சாலையை கடந்துள்ளார். அப்போது நாமக்கல் நோக்கி சென்ற பஸ், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை நாமக்கல் GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய சேலம் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

error: Content is protected !!