News February 9, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் கடந்த 5-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மக்களின் கோரிக்கைக்கு இணங்க இன்று (பிப்.9) முதல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியிலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர கூடுதல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
தருமபுரி: கண நேரத்தில் வாலிபர் மரணம்!

கம்பைநல்லூர் அருகே கே.அக்ரஹாரத்தை சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி ஆதிபிரகாஷ் (19). இவர் கம்பைநல்லூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது நத்தம் மேடு அருகே நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்த இவர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
தருமபுரி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். தருமபுரி மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
தருமபுரி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் அரூர், கடத்தூர், பொம்மிடி, உத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


