News November 9, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர் மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க வரும் நவ.15-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

கோவை: பூச்சி மருந்து குடித்து தற்கொலை

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓரநள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடன் சுமை காரணமாக இவர் இன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் கோவை ஜிஎச் கொண்டு சென்றனர். அங்கு நாடித்துடிப்பு குறைவாக இருந்த நிலையில் காரமடை சேரன் நகரில் உள்ள தாய் மாமா வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்தார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 9, 2025

கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

கோவையில் நாய் குட்டிகளை கொன்றவர் கைது

image

கோவை சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா போதையில் நேற்று முந்தினம் இரவு சிச்சு விஷ்ணு என்பவர் இரண்டு நாய் குட்டிகளை கல்லால் அடித்து கொன்றார். அவர் மீது வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர், நேற்று கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!