News March 2, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இன்று மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தகுதியுடைய பயனாளிகள் பயன்படுத்தி சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். SHARE IT

Similar News

News March 2, 2026

ஈரோட்டில் இவர் போட்டியா?

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட சென்னை திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு இன்று வழங்கினார். இந்நிகழ்வில் உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 2, 2026

ஈரோட்டில் குறைந்த விலையில் வண்டி வேண்டுமா?

image

ஈரோடு மாவட்டத்தில் உரிமையாளர் கோராத 342 இருசக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் மார்ச் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 8 முதல் 10 மணிக்குள் ரூ.2,000 முன்பணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0424-2258100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என எஸ்.பி. சுஜாதா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

மஞ்சள் சந்தை: ஹோலிபண்டிகை விடுமுறை தேதியில் மாற்றம்

image

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஹோலி பண்டிகை விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 3-ம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!