News December 23, 2025

அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

image

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற
24.12.2025 (புதன்) அன்று மாலை 03 மணிக்கு மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும்
கூட்ட அலுவலகத்தில் (GDP Hall) நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களுடைய நிறை, குறைகளை மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தெரிவித்தார்.

Similar News

News December 31, 2025

ஈரோடு: 10th போதும் சத்துணவு மையத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்-ரூ.3000 முதல் ரூ.9,000 ஆகும். விண்ணப்பங்களை https://erode.nic.in/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன.9.26-க்குள் மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களில் வழங்க வேண்டும். (SHARE பண்ணுங்க)

News December 31, 2025

பயத்தில் சத்தியமங்கலம் மக்கள்

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் சாலையில் சிறுத்தை ஹாயாக படுத்திருந்தது. வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

News December 31, 2025

ஈரோடு: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!